என் மலர்

    செய்திகள்

    கோவை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: ஒரு வாரத்தில் 5-வது கொலை
    X

    கோவை அருகே வாலிபர் வெட்டிக் கொலை: ஒரு வாரத்தில் 5-வது கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    மதுரை மாவட்டம் மேல அரசரடி என்.எஸ்.கே.நகர் 1-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் சேதுராமன்(வயது 22). இவர் கடந்த 25 நாட்களுக்கு முன்பு கோவையை அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள குளத்தூர் தட்டான்தோட்டம் பகுதியில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கினார்.

    இவருடன் கோவை சங்கனூர் அருகே உள்ள நல்லாம் பாளையத்தை சேர்ந்த கரிகாலன்(31) என்பவரும் தங்கினார். இருவரும் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்வதாகவும், தொழில் ரீதியாக இங்கு தங்கியிருப்பதாக சுகுமாரிடம் கூறினர்.

    நேற்றிரவு வீட்டில் சேதுராமன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுகுமார் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    சேதுராமனின் தலை, கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன. உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் ஒன்றும் கிடந்தது. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கரிகாலன் நேற்று முன்தினம் ஒரு இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அப்போது சுகுமார் அந்த பெண் யார்? என கரிகாலனிடம் கேட்டதற்கு அவள் எனது மனைவி என கூறி உள்ளார்.

    வீட்டில் இருந்த கரிகாலன், அவருடன் வந்த பெண் ஆகியோர் மாயமாகி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பெண் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தலைமறைவான கரிகாலன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த பெண் யார்? உண்மையிலேயே அவரது மனைவி தானா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைமறைவான கரிகாலனை பிடித்தால் சேதுராமன் கொலைக்கான காரணம் தெரிய வரும். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கரிகாலனை தேடி வருகின்றனர்.

    கோவை புறநகர் பகுதியில் கடந்த 1 வாரத்தில் நடைபெறும் 5-வது கொலை இது ஆகும். கடந்த 16-ந் தேதி நள்ளிரவில் துடியலூர் அருகே ரத்தினபுரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தீபாவளி தினமான 18-ந் தேதி பொள்ளாச்சியில் டிரைவர் ஆறுமுகம், ஆலாந்துறை நரசிபுரம் பகுதியில் சின்னத்துரை என்ற விவசாயி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

    கடந்த 21-ந் தேதி நெகமத்தில் சசிகுமார் என்ற விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று சூலூரில் வீடு எடுத்து தங்கியிருந்த மதுரையை சேர்ந்த சேதுராமன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் 4 கொலைகளிலும் கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டனர். சேதுராமன் கொலையில் தலைமறைவாக உள்ள கரிகாலனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    Next Story
    ×