செய்திகள்
உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி மனைவி பலி
உசிலம்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு விவசாயி மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகைராஜா, விவசாயி. இவரது மனைவி அம்மாவாசி (வயது 50).
இவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அருகே உள்ள செக்கானூரணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அம்மாவாசிக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அம்மாவாசி நேற்று இரவு இறந்தார்.
Next Story