என் மலர்

    செய்திகள்

    போலீஸ் தாக்கியதால் தற்கொலை செய்த தொழிலாளி - உறவினர்கள் போராட்டம்
    X

    போலீஸ் தாக்கியதால் தற்கொலை செய்த தொழிலாளி - உறவினர்கள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாங்குநேரி அருகே போலீசார் தாக்கியதில் மனமுடைந்த தொழிலாளி தற்கெலை செய்துக் கொண்டார்.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள குமாரசாமியாபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மீது முத்துச்செல்வி விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் செல்வகுமாரை விசாரணைக்கு அழைத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் செல்வகுமாரின் உறவினர்கள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×