என் மலர்

    செய்திகள்

    சிவகங்கையில் சுப்பிரமணிய சாமி உருவப்பொம்மை எரிப்பு ரஜினி ரசிகர்கள் கைது
    X

    சிவகங்கையில் சுப்பிரமணிய சாமி உருவப்பொம்மை எரிப்பு ரஜினி ரசிகர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்த சுப்பிரமணியசாமியை கண்டித்து அவரது ஊருவப்பொம்மையை எரிக்க முயன்ற ரஜினி ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக சில சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் 15 பேர் சிவகங்கை பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் ரஜினியை கீழ்தரமாக விமர்சித்த சுப்பரமணியசாமியை கைது செய்யவேண்டும் என கோ‌ஷமிட்டவாறு அவரது உருவப்பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த நகர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உருவப்பொம்மையை பறிமுதல் செய்து ரஜினி ரசிகர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×