என் மலர்

    செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்: பி.ஆர். சுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் லாரி மூலம் குடிநீர் விநியோகம்: பி.ஆர். சுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரி மூலம் குடிநீர் விநியோகத்தை பி.ஆர். சுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார். பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து குடிநீரை பெற்று சென்றனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை போக்க நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் தனது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதிக்கு ஒரு தண்ணீர் லாரி என்ற அடிப்படையில் ஆறு தொகுதிகளிலும் இலவசமாக குடிநீர் விநியோகம் செய்து வருகிறார்.

    இதன்படி திருச்செங் கோடு நகராட்சியில் வார்டு எண்22 அம்பேத்கர் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் காலி குடங்களுடன் வந்து குடிநீரை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர். நீண்ட நாட்களாக இருக்கும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு குடிநீர் வழங்கிய பாராளுமன்ற  உறுப்பினர்பி. ஆர்.சுந்தரத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

    இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சித்ரா ஞானவேல், துரை (எ) கந்தசாமி, வேல்முருகன், வழக்கறிஞர் வெங்கட் கண்ணன், கவுதம், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×