செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே பிக்பாக்கெட் அடித்த ஆட்டோ டிரைவர் கைது
கிருஷ்ணகிரி அருகே பிக்பாக்கெட் அடித்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள ஒரப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தன்(48), இவர் செட்டிப்பள்ளி கூட்ரோடு அருகே உள்ள
பேக்கரி கடையில் கேக் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீர் என கத்தியை காட்டி ஆனந்தன் பாக்கெட்டில் இருந்து ரூ.350 எடுத்து கொண்டு அருகில் வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ஆனந்தன் சத்தம்போட அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பின்னர் அந்த வாலிபரை கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் ரவி(27) ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள ஒரப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தன்(48), இவர் செட்டிப்பள்ளி கூட்ரோடு அருகே உள்ள
பேக்கரி கடையில் கேக் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீர் என கத்தியை காட்டி ஆனந்தன் பாக்கெட்டில் இருந்து ரூ.350 எடுத்து கொண்டு அருகில் வந்தால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து ஆனந்தன் சத்தம்போட அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பின்னர் அந்த வாலிபரை கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் ரவி(27) ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story