என் மலர்

    செய்திகள்

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டும் மழையில் தொடர் போராட்டம்
    X

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டும் மழையில் தொடர் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் கொட்டும் மழையில் தொடர் போராட்டம் நடத்தினர்.
    சிதம்பரம்:

    ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் வரலாறு காணாத அளவு நடக்கிறது. அவர்களுக்கு பொது மக்கள், பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து அவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிக்கும் அனைத்து துறை மாணவர்களும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவில் சிதம்பரத்தில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கனமழை கொட்டியது. மழையை பொருட்படுத்தாமல் மாணவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போராட்டம் குறித்து மாணவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும், புயல் வந்தாலும் கவலைபடாமல் தொடர்ந்து போராடுவோம். பீட்டா அமைப்பை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வகைகளை சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர். இன்று 5-வது நாளாகவும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் சிதம்பரம் நகரமே இளைஞர்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. போராட்டம் நடக்கும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×