என் மலர்

    சினிமா

    கேணி
    X

    கேணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிராகிரண்ட் நேச்சர் பிலிம் கிரியே‌ஷன்ஸ் சார்பாக சஜீவ் பி.கே, ஆன்சஜீவ் தயாரித்துள்ள படம் ‘கேணி’. இந்த படத்தில் ஜெயப்ரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    பிராகிரண்ட் நேச்சர் பிலிம் கிரியே‌ஷன்ஸ் சார்பாக சஜீவ் பி.கே, ஆன்சஜீவ் தயாரித்துள்ள படம் ‘கேணி’. இந்த படத்தில் ஜெயப்ரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கிய பாத்திரத்தில் பார்த்திபன், நாசர். இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.


    ஒளிப்பதிவு- நெளஷாத் ஷெரிப், இசை- எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை-சாம் சி.எஸ்., எடிட்டிங்- ராஜாமுகமது, பாடல்கள்- பழனிபாரதி, கதை, திரைக்கதை, இயக்கம்- எம்.ஏ.நிஷாத். இவர் 7 மலையாள படங்களை இயக்கியவர்.


    இந்த படம் குறித்து இயக்குனர் எம்.ஏ.நிஷாத் கூறுகையில்....


    “தமிழ்நாடு- கேரளா எல்லையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு ‘கேணி’ உருவாகி இருக்கிறது. இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். முழுக்க முழுக்க சமூகத்திற்கான படம். எதிர் காலத்தில் மக்களுக்கு பிரதானமான பிரச்சினையாக மாறப் போகிற தண்ணீர் பற்றிய விழிப்புணர்வை ‘கேணி’ ஏற்படுத்தும். எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் பொதுவானது. அதை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்பதை இந்த படத்தின் மூலம் ஆணித்தரமாக பேசியிருக்கிறோம். 25 ஆண்டுகளுக்கு பிறகு இதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடி இருக்கிறார்கள்” என்றார்.


    ‘கேணி’ தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

    Next Story
    ×