என் மலர்

    சினிமா

    விசிறி
    X

    விசிறி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர்.
    ஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம் தயாரிக்கும் படம் ‘விசிறி’. இதில் ராம்சரவணா, ராஜ், சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்துள்ளனர். ரெமோனா ஸ்டெபனி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பி.டி.அரசகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- விஜய் கிரண், இசை-தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ‌ஷங்கர், எடிட்டிங்- வடிவேல், விமல்ராஜ், வசனம்-பித்தாக் புகழேந்தி, கதை, திரைக்கதை, இயக்கம்- வெற்றி மகாலிங்கம்.

    படம் குறித்து கூறிய இயக்குநர்...

    “தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் ஆகிய “தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா ரசிகர்களிடம் தொடங்கிய மோதல், “எம்.ஜி.ஆர். -சிவாஜி, ‘ரஜினி -கமல்’ என்று தொடர்ந்தது. அந்த வரிசையில் ‘தல-தளபதி’ ரசிகர்களின் மோதல் மிக முக்கியமானது மட்டுமல்ல, சுவாரஸ்ய மானதும் கூட. அதை மையக்கருவாக வைத்து விசிறி படத்தின் கதையை இயக்கி இருக்கிறேன்.

    ‘தல’ விசிறியாக அழகி படத்தில் குட்டி பார்த்திபனாக நடித்த ‘ராம்சரவணா’ , ‘தளபதி’ விசிறியாக விஸ்காம் மாணவர் ‘ராஜ் சூர்யா’ இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இத்தாலி நாட்டில் வசிக்கும் தமிழ் பெண் ‘ரெமோனா ஸ்டெபனி’ கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘தல-தளபதி’ ரசிகர்கள் இடையே ஏற்படும் மோதலையும், இதற்குள் காதலையும் முன்னிறுத்தி ரசிகர்களின் பிரதி பலிப்பாக ‘விசிறி’ உருவாகி இருக்கிறது” என்றார்.
    Next Story
    ×