சினிமா
தபால்காரன்
அஞ்சல் நிலைய பின்னணியில் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமூக கருத்தை சொல்லும் ‘தபால்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் படம் ‘தபால் காரன்’
இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சாமிநாதன். ஞான சம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்‘ வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோர் நடிக் கிறார்கள்.
ஒளிப்பதிவு- ஜி.செல்வ குமார், இசை- நீரோ பிரபா கரன், எடிட்டிங் - சங்கர்.
இயக்கம்- டி.உதயகுமார் இவர் இயக்குனர் ராஜ் மோகனின் உதவியாளர். தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.
படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது ஒரு அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம்.
வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.
இந்த படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் இருக்கும். இது ஒரு முழுநீள கமர்சியல் படம், பொழுதுபோக்குடன் சமூகக் கருத்தும் சொல்லும் படம்” என்றார்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜை போரூரில் நடைபெற்றது.
இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சாமிநாதன். ஞான சம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்‘ வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோர் நடிக் கிறார்கள்.
ஒளிப்பதிவு- ஜி.செல்வ குமார், இசை- நீரோ பிரபா கரன், எடிட்டிங் - சங்கர்.
இயக்கம்- டி.உதயகுமார் இவர் இயக்குனர் ராஜ் மோகனின் உதவியாளர். தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.
படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது ஒரு அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம்.
வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.
இந்த படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் இருக்கும். இது ஒரு முழுநீள கமர்சியல் படம், பொழுதுபோக்குடன் சமூகக் கருத்தும் சொல்லும் படம்” என்றார்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜை போரூரில் நடைபெற்றது.
Next Story