சினிமா
எவனவன்
வின்சென்ட் அசோகன்-சோனியா அகர்வால் போலீசாக கலக்கும் ‘எவனவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘எவனவன்’.
இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அருண் பிரசாத், இசை-பெடோ பீட் , நடனம்- விமல், பாடல்கள் தென்றல் ராம்குமார், எடிட்டிங்-ராமாராவ், ஸ்டண்ட்- குன்றத்தூர் பாபு, கலை- கே.வி.லோகு, தயாரிப்பு-தங்கமுத்து, பி.கே.சுந்தர்,கருணா, நட்ராஜ்.
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்-ஜே.நட்டிகுமார். இவருடைய தந்தை ஜானகிராமன் பல படங்களை தயாரித்தவர். நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர். சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற ‘மெய்ப் பொருள்’, ‘பனித்துளி’ படங்களையும் இயக்கியவர். அவரிடம் படத்தை பற்றி கேட்ட போது...
“எதையும் திட்டமிட்டு செயல்படு வதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். என்றாலும், விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலர் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது? என்பதுதான் கதைக்களம். இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாக கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்” என்றார்.
இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் புதுமுகம் அகில் சந்தோஷ், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- அருண் பிரசாத், இசை-பெடோ பீட் , நடனம்- விமல், பாடல்கள் தென்றல் ராம்குமார், எடிட்டிங்-ராமாராவ், ஸ்டண்ட்- குன்றத்தூர் பாபு, கலை- கே.வி.லோகு, தயாரிப்பு-தங்கமுத்து, பி.கே.சுந்தர்,கருணா, நட்ராஜ்.
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம்-ஜே.நட்டிகுமார். இவருடைய தந்தை ஜானகிராமன் பல படங்களை தயாரித்தவர். நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர். சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற ‘மெய்ப் பொருள்’, ‘பனித்துளி’ படங்களையும் இயக்கியவர். அவரிடம் படத்தை பற்றி கேட்ட போது...
“எதையும் திட்டமிட்டு செயல்படு வதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். என்றாலும், விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலர் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது? என்பதுதான் கதைக்களம். இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விறுப்பாக கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்” என்றார்.
Next Story