சினிமா
மெய்மை
பூச்சாண்டி டிரீம் பிக்சர்ஸ் சார்பில் பி.மோகன்குமார் தயாரிக்கும் படம் ‘மெய்மை’. இதில் மானஸ், அமரன், ரஜின், வித்யாஸ்ரீ, மேரி, பூவிலங்கு மோகன், ரவிஷாந்த், கராத்தே ராஜா, ருக்மணி, ஹர்ஷித், மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- மகிபாலன், சண்டைப்பயிற்சி-அமிதாப், நடனம்-சுஜித்.
‘மெய்மை’ படத்துக்கு டி.எஸ்.திவாகர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி உள்ளார். இது இவர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 3-வது படம்.
பரபரப்பான ஒரு இடத்தில் உல்லாச விடுதி ஒன்று உள்ளது. தினமும் பல ஜோடிகள் வந்து போவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அப்படி இருக்கும் இந்த இடத்தில் ஒருநாள் அந்த விடுதிக்குள் நுழைந்த காதல் ஜோடிகள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன அவர்கள் மாய உலகம் ஒன்றில் சங்கமிக்கிறார்கள்.
எப்படி அவர்கள் அந்த மாய உலகத்திற்குள் சென்றார்கள். அங்கு என்ன நடந்தது. அங்கிருந்து தப்பித்தார்களா? மீண்டும் இந்த உலகத்திற்குள் வந்தார்களா? அது என்ன அபூர்வ சக்தியின் மகிமை, பில்லி சூனியமா? சாத்தானின் வேலையா? என பல கேள்விகளுக்கு விடை தாங்கி விரைவில் வர இருக்கும் படம் ‘மெய்மை’.
இதன் படப்பிடிப்பு ஆனைகட்டி, கொடைக்கானல், ஊட்டி, மூணாறு மற்றும் மலேசியாவில் நடைபெற்றுள்ளது.