என் மலர்

    சினிமா

    அம்மாயி
    X

    அம்மாயி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கே.பி.ஆர்.-எண்டர்டெய்ன் மென்ட்ஸ் சார்பில் கே.பி. ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. இதில் கதாநாயகனாக வினய் நடிக்கிறார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
    கே.பி.ஆர்.-எண்டர்டெய்ன் மென்ட்ஸ் சார்பில் கே.பி. ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘அம்மாயி’. இதில் கதாநாயகனாக வினய் நடிக்கிறார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இளையராஜா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு- சரவணன், படத்தொகுப்பு- ஜெயசங்கர், கலை-ஜான்பிரிட்டோ, ஸ்டண்ட்-பவர் பாஸ்ட்.

    அறிமுக இயக்குனர் ஜி.சங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘அம்மாயி’ திரைப்படத்தின் தொடக்க விழா இளையராஜா முன்னிலையில் நடந்தது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்க பூஜையுடன் படம் தொடங்கியது.

    இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரன் பேசும் போது, “இந்த படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி. இதில் இசைஞானி பணியாற்றுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

    படத்தின் நாயகன் வினய், “இந்த படம் எனக்கு நல்ல படமாக அமையுமென நம்புகிறேன்” என்றார்.

    நடிகர் மயில்சாமி “ஒரு படம் என்னை போன்று பலருக்கு வேலை கொடுக்கிறது. படம் முழுவதும் வருவது போல் எனது கதாபாத்திரம் இருக்குமென இயக்குனர் கூறியிருக்கிறார். எங்களுக்கு இளையராஜாவே இருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்றார்.

    இயக்குனர் ஜி.சங்கர் “இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளர் கே.பி.ராஜேந்திரனுக்கு நன்றி. நான் தெய்வமாக நினைக்கும் இசைஞானி இளையராஜா எனது படத்திற்கு இசையமைப்பதை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை.” என்று கூறினார்.
    Next Story
    ×