என் மலர்

    சினிமா

    அதுமட்டும் வேண்டாம்: பயப்படும் முன்னணி நடிகை
    X

    அதுமட்டும் வேண்டாம்: பயப்படும் முன்னணி நடிகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனக்கு எவ்வுளவு பணம் கொடுத்தாலும் அதை மட்டும் வேண்டாம் என்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறாராம். அந்த வகையில் அந்த நடிகை நடித்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றதாம்.

    சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து வெளியான அந்த படத்தில் லேசாக அரசியல் சாயம் வீசுவதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

    இதுஒருபுறம் இருக்க அந்த நாயகி தனது அடுத்த படங்களில் பிசியாக நடிக்க இருக்கிறாராம். இதில் ஒரு படத்தை கண்ணை இமைக்காமல் பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். அந்த படத்தில் நாயகி போலீசாக நடிக்கிறாராம். ஆனால் படத்தில் எந்தவொரு காட்சியிலும் போலீஸ் உடை அணிந்து நடிக்கவில்லையாம்.



    மேலும் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க நடிகை விரும்பவில்லையாம். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அந்த நடிகை காக்கி சட்டை என்றால் மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன் என்று கோலிவுட் வட்டாரத்தில் குழப்பமாகவே இருக்கிறது. எனினும் இதுகுறித்து நடிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
    Next Story
    ×