என் மலர்

    சினிமா

    இயக்குநரை நம்பி மனமுடைந்த குணசித்திர நடிகர்
    X

    இயக்குநரை நம்பி மனமுடைந்த குணசித்திர நடிகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநர், தனது மகனுக்கும் வாழ்க்கை கொடுப்பார் என்று நம்பி இருந்த நடிகர் ஒருவர் தற்போது மனமுடைந்துவிட்டாராம்.
    பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தை கொடுத்தது போல், விலங்கு படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் தனது மகனுக்கு வாய்ப்பளிக்கும்படி தம்பி நடிகர் இயக்குநரிடம் கேட்டிருந்தாராம். இயக்குநரும் நடிகரின் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாராம்.

    ஆனால் இயக்குநர் வேறொரு நடிகரை வைத்து படத்தை தொடங்கிவிட்டாராம். இதனால் இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர், தனது வாழ்க்கைக்கு ஏற்றத்தை கொடுத்த இயக்குநர் என்பதால் அதனை பொறுத்துக் கொண்டாராம்.

    மேலும் அவரது மகனின் முதல் படம் போதிய வரவேற்பை பெறாததால், அடுத்த படத்தை தாமே இயக்கவும் அந்த நடிகர் முடிவு செய்திருக்கிறாராம்.
    Next Story
    ×