என் மலர்

    சினிமா

    கவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை
    X

    கவர்ச்சி வலையில் சிக்கிய முன்னணி நடிகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், தனது அடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
    தெலுங்கு மற்றும் இந்தியில் தலா ஒரு படங்களில் நடித்துவிட்டு, தமிழ் சினிமாவில் தான் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்தவர் அந்த வன நடிகை. அவரது நடிப்பை விட நடனத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.

    தனது முதல் படம் வெளியாவதற்கு முன்னரே அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியிருந்த நடிகைக்கு, மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், படங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறாராம்.



    ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட சில பிரச்சனைகளால், தனது முதல் படம் பெரிய வரவேற்பை பெறாததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதால், தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக நடிகை கூறியிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவால் அவரது காட்டில் கனமழை கொட்டுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    Next Story
    ×