என் மலர்

    சினிமா

    தமிழ் தெரிந்த நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை: புலம்பும் நடிகர்
    X

    தமிழ் தெரிந்த நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை: புலம்பும் நடிகர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் தெரிந்த நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு நடிகர் புலம்பி வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் அந்த மூத்த நடிகர். ஆரம்ப காலங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் தற்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட மூன்றெழுத்து படமொன்றில் முக்கியமான வில்லன் வேடம் ஏற்று நடித்து, நடிப்பால் மிரள வைத்திருந்தார்.

    இந்த நடிகருக்கு முழுமையான திறமை இருந்தும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். இதற்கு காரணமாக அவர் நினைப்பது, வெளிமாநில வில்லன்களுக்கு தமிழ் சினிமா அதிக வாய்ப்புகள் கொடுப்பதுதானாம். மேலும், இங்குள்ள இயக்குனர்கள் தமிழிலேயே திறமையான நடிகர்கள் இருந்தாலும், வெளிமாநில நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாராம்.



    மேலும், அப்படி வரும் வெளிமாநில நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியாமல் இருக்கும் சூழ்நிலை இங்கு நிலவுகிறது. அவர்களுடைய பெயர்களையே எழுதி வைத்துதான் உச்சரிக்கிறார்கள். பெயரைக்கூட உச்சரிக்க முடியாத ஒருவரை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார்களே தவிர, தமிழ் தெரிந்த நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை என்று தனது சக நண்பர்களிடம் சொல்லி புலம்புகிறாராம்.
    Next Story
    ×