சினிமா
காதல் மனைவியை பிரிந்ததற்கு புதிய காரணம் கூறிய இயக்குனர்
காதலித்து மணந்துகொண்ட நடிகையை பிரிவதற்கு பல காரணங்களை கூறிய இயக்குனர் ஒருவர் தற்போது புதிய காரணத்தை கூறியுள்ளார். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
பட்டதாரி நடிகையும், சென்னை பட்டணத்து இயக்குனரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். யார் கண் பட்டதோ? இவர்கள் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே முறிந்துபோனது. இந்த மண முறிவுக்கு நடிகை இயக்குனரின் பெற்றோரை மதிக்காமல் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதுதான் காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
ஆனால், இவர்களின் பிரிவுக்கு தற்போது இயக்குனரே ஒரு காரணம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், இயக்குனர் தன்னுடைய பெற்றோர்களால்தான் என்னுடைய காதல் மனைவியை பிரிந்துவிட்டேன் என்று மனதார அழுது புலம்பியுள்ளாராம்.
மேலும், தற்போது பெற்றோருடன் வசிக்காமல் அவர் தனிமையில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் தன்னுடைய பெயருக்கு முன்னால் அப்பாவின் பெயரை இன்ஷியலாக போடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், நடிகையும் தனது காதல் கணவரை பிரிந்ததற்கு ரொம்பவும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் தனிமை கூடிய விரைவில் இவர்களை சேர்த்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
ஆனால், இவர்களின் பிரிவுக்கு தற்போது இயக்குனரே ஒரு காரணம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால், இயக்குனர் தன்னுடைய பெற்றோர்களால்தான் என்னுடைய காதல் மனைவியை பிரிந்துவிட்டேன் என்று மனதார அழுது புலம்பியுள்ளாராம்.
மேலும், தற்போது பெற்றோருடன் வசிக்காமல் அவர் தனிமையில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இனிமேல் தன்னுடைய பெயருக்கு முன்னால் அப்பாவின் பெயரை இன்ஷியலாக போடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில், நடிகையும் தனது காதல் கணவரை பிரிந்ததற்கு ரொம்பவும் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்களின் தனிமை கூடிய விரைவில் இவர்களை சேர்த்துவிடும் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
Next Story