என் மலர்

    சினிமா

    கார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    கார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
    `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 
    அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

    இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாகி விட்டார் கார்த்திக் நரேன். அந்த படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    அதன்படி கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்துக்கு `நாடக மேடை' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான `நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்' மூலம் தயாரிக்கிறார்.



    இந்த படத்திற்கு சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்ய ரோன் ஈத்தன் யோகன் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பு பணிகளையும்,  சிவசங்கர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். 

    இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×