சினிமா
பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்
பேருந்து கட்டண உயர்வை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். தங்களின் மாதாந்திர சம்பளத்தில் அதிக தொகையை அரசு பேருந்து கட்டணத்துக்கு செலவிடும் சூழல் உருவாகியுள்ளது.
அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க் கட்சிகள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Next Story