சினிமா
ரஜினி குரலுக்காக காத்திருக்கும் இரஞ்சித்
கபாலி படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் இரஞ்சித், ரஜினியின் குரலுக்காக காத்திருக்கிறார். #Kaala
இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `கபாலி' படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள்.
இன்னும் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டும் மீதமிருக்கிறதாம். ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்து விட்டால் அடுத்த கட்டத்திற்கு காலா நகர இருக்கிறது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story