என் மலர்

    சினிமா

    தனுஷ் படத்திற்கு குரல் கொடுக்கும் இளையராஜா
    X

    தனுஷ் படத்திற்கு குரல் கொடுக்கும் இளையராஜா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனுஷ் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் ‘மாரி 2’ படத்தில் இளையராஜா சிறப்பு பாடல் ஒன்றை பாட இருக்கிறார். #Maari2
    மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாலாஜி மோகன் - தனுஷ் கூட்டணியில் ‘மாரி 2’ உருவாகி வருகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கிறார்கள். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது சிறப்பம்சம். அதை விட சிறப்பம்சம் என்னவென்றால் யுவன் இசையில் உருவாகும் சிறப்பு பாடலுக்கு இளையராஜா பாட்டு பாட இருக்கிறார். 



    இது குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், "மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு தெய்வீக மகிழ்ச்சி அனுபவம். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். அதேவேளையில் இது எங்களை சிலிர்படையவும் செய்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இத்துடன் இளையராஜாவுடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனுஷ் பகிர்ந்திருந்தார்.
    Next Story
    ×