என் மலர்

    சினிமா

    தெலுங்கில் சொந்த குரல் கொடுத்த சூர்யா
    X

    தெலுங்கில் சொந்த குரல் கொடுத்த சூர்யா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உருவாகி இருக்கும் ‘கேங்’ படத்தில் சொந்த குரலில் பேசியிருக்கிறார் நடிகர் சூர்யா.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தப் படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் பேசியதில்லை. ஆனால், முதல் முறையாக ‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ படத்தில் சூர்யாவே டப்பிங் பேசியுள்ளார்.

    தெலுங்கில் உருவாகியுள்ள ‘கேங்’ படத்தின் டீசரில் சூர்யா சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார். டீசரில் சூர்யாவின் தெலுங்கு உச்சரிப்பு நன்றாக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
    Next Story
    ×