என் மலர்

    சினிமா

    கெடுவான் கேடு நினைப்பான்: விஷாலை விளாசிய -ராதிகா சரத்குமார்
    X

    கெடுவான் கேடு நினைப்பான்: விஷாலை விளாசிய -ராதிகா சரத்குமார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக நடிகை ராதிகா டுவிட் செய்துள்ளார்.
    சென்னையில் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து நடிகர் மோகன் ராமன் தனது டுவிட்டரில், ‘என்ன நடக்கிறது? தயாரிப்பாளர்கள் தான் வேலை தருகிறார்கள். அவர்களை எம்ஜிஆர் மற்றும் சிவாஜி முதலாளி என்று அழைத்தார்கள். இதை பார்த்து வேதனையாக உள்ளது. உள் பூசல் காரணமாக மக்கள் மத்தியில் நாம் மதிப்பை இழந்து வருகிறோம் என்று கூறி உள்ளார்.

    மோகன் ராமின் டுவீட்டை பார்த்த ராதிகா கெடுவான் கேடு நினைப்பான் என்று பதில் அளித்துள்ளார்.

    பிரச்சினை என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமே தவிர பிரஸ்ஸுக்கு போகக் கூடாது என்று தலைவர் கூறுவது காமெடியாக உள்ளது. எங்கேயோ கேட்ட குரல். ஜெகில் அன்ட் ஹைட் போன்று அவருக்கு மரியாதையோ நெறிமுறையோ ஒன்றும் தெரியாது என்று விஷால் பற்றி டுவீட்டியுள்ளார் ராதிகா. உண்மை நிறத்தை ரொம்ப நாள் மறைத்து வைக்க முடியாது என்று விஷால் பற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராதிகா சரத்குமார்.
    Next Story
    ×