என் மலர்

    சினிமா

    நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் விக்ரம் பிரபு
    X

    நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் விக்ரம் பிரபு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் விக்ரம் பிரபு நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    விக்ரம் பிரபு நடிப்பில் இந்த வருடம் ‘சத்ரியன்’ மற்றும் ‘நெப்புடா’ படங்கள் வெளியானது. இப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ‘பக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி மற்றும் பிந்துமாதவி நடித்து வருகிறார்கள்.

    இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எஸ்.எஸ்.சூர்யா இயக்கி வரும் இப்படத்தை டி.சிவகுமார் தயாரித்து வருகிறார். சத்யா இசையமைத்து வருகிறார். கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக பக்கா உருவாகி வருகிறது.

    இந்நிலையில், தன்னுடைய அடுத்த பட தலைப்பை நாளை வெளியிட இருப்பதாக விக்ரம் பிரபு, தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் கையில் துப்பாகியுடன் ஒருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் என்ன மாதிரியான தலைப்பாக இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×