என் மலர்

    சினிமா

    படத்தில் இருந்து விலக எனக்கு உரிமை இருக்கிறது: திரிஷா
    X

    படத்தில் இருந்து விலக எனக்கு உரிமை இருக்கிறது: திரிஷா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி 2’ படத்தில் இருந்து விலகியது குறித்து நடிகை திரிஷா விளக்கம் அளித்துள்ளார்.
    விக்ரம்–திரிஷா ஜோடியாக நடித்து 2003–ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. ஹரி இப்படத்தை இயக்கி இருந்தார். போலீஸ் அதிகாரிக்கும் தாதாவுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து அதிரடி படமாக தயாராகி இருந்தது.

    இந்த படம் ரூ.3 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ரூ.31 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. சூர்யாவை வைத்து சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை எடுத்துள்ள ஹரி, சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை சிபுதமீன் தயாரிப்பில் இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார். விக்ரம் கதாநாயகானாகவும் முதல் பாகத்தில் நடித்துள்ள திரிஷாவே கதாநாயகியாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

    படப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ‘சாமி–2’ படத்தில் நடிக்க முடியாது என்று திரிஷா திடீரென்று விலகியதால் படப்பிடிப்பு நின்று போனது. கதையில் தனது கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகவும் இதனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

    திரிஷா முடிவால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். படத்துக்கு அட்வான்ஸ் வாங்கி விட்டு நடிக்க மறுப்பதாக திரிஷா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடந்து நடிகர் சங்கம் திரிஷாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    இதற்கு திரிஷா பதில் அளித்து நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கதை பிடிக்காததால் படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு நாள் கூட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து விலக தனக்கு உரிமை உள்ளது என்றும் கடிதத்தில் திரிஷா குறிப்பிட்டு உள்ளார். அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

    அவர் விளக்கத்தை நடிகர் சங்கம் ஏற்றுக்கொண்டு விட்டது. இந்த நிலையில் திரிஷாவை சமரசப்படுத்தி ‘சாமி–2’ படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
    Next Story
    ×