என் மலர்

    சினிமா

    கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்
    X

    கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துக் கொண்ட அசோக்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும் என்று விஷால் கூறியுள்ளார்.
    பிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று அசோக்குமார் உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்று மதுரையில் நடந்த அசோக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேலும், அசோக்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறுகையில், ''கந்துவட்டி பிரச்சினை அனைவரையும் பாதித்துள்ளது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் நான், கவுதம் மேனன், பார்த்திபன் ஆகியோர் இருக்கிறோம்.

    கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் மரணமே கடைசியாக இருக்க வேண்டும். அசோக்குமாருக்கு தொல்லை கொடுத்த அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். அன்புசெழியனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், என்று யார் வந்தாலும் விடமாட்டோம்.

    கந்துவட்டியால், அதிக வட்டியால் தயாரிப்பாளரை கொடுமைப்படுத்துவது தவறு. இனி அப்படி தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும். 90% தயாரிப்பாளர்கள் கடனில்தான் இருக்கிறோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம்'' என்றார்.
    Next Story
    ×