என் மலர்

    சினிமா

    அன்புச்செழியனைக் கைது செய்ய வேண்டும்: சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி போலீசில் புகார்
    X

    அன்புச்செழியனைக் கைது செய்ய வேண்டும்: சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி போலீசில் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உறவினரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று சசிகுமார், அமீர், சமுத்திரகனி ஆகியோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
    நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார். இவர் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், தயாரிப்பு நிர்வாகியாக சசிகுமாரின் அத்தை மகன் அசோக் குமார் பணியாற்றி வந்தார். இன்று மதியம், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டில் அசோக் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
    தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார்

    கடன் பிரச்னைதான் அசோக் குமாரின் தற்கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில், ‘ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    அன்புச்செழியன்

    இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குனர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
    Next Story
    ×