என் மலர்

    சினிமா

    மந்திராலயத்தில் சிறப்பு வழிபாடு செய்த ரஜினிகாந்த்
    X

    மந்திராலயத்தில் சிறப்பு வழிபாடு செய்த ரஜினிகாந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புண்ணிய திருத்தலமான மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் பிரபல புண்ணிய திருத்தலமான மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் அமைந்துள்ளது. இங்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக அவர் மந்திராலயம் வருவதை யாருக்கும் தெரிவிக்கவில்லை. திடீரென அங்கு வந்தார்.

    பின்னர் அவர், அங்குள்ள துங்கபத்ரா நதியில் புனித நீராடினார். அதன்பின்னர் அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்குச் சென்று அங்கேயும் தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர், ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, அவர், மடாதிபதி சுபுதீந்திராவை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது அவர் சுமார் 15 நிமிடங்கள் வரை மடாதிபதியுடன் பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

    விரைவில் ரஜினி நடித்த 2.0 படம் வெளிவர இருப்பதால் படம் வெற்றிகரமாக அமைய வேண்டி ரஜினிகாந்த் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
    Next Story
    ×