என் மலர்

    சினிமா

    மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
    X

    மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் நேரடி தமிழ் படத்திற்கு மணிரத்னம் பட வரிகளை துல்கர் சல்மான் படக்குழு கைப்பற்றியிருக்கிறது.
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.

    அவர் நடிப்பில் தமிழில் வெளியான `வாயை மூடி பேசவும், `ஓ கே கண்மணி' உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதேபோல் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான `சோலா' படமும் பெரிய வெற்றியை பெறவில்லை.

    இந்நிலையில், துல்கர் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார். இதுதவிர அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் நடிக்கும் படத்தின் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நாளை தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து சென்னை, கோவா உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. முழுக்க முழுக்க சாலைகளிலேயே படமாக்கப்படும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஐ.டி. ஊழியராக நடிக்கிறார். துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.

    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1993-ல் வெளியான `திருடா திருடா' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' என்ற பாடல் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×