சினிமா
2.0 படத்தில் நம்ப முடியாத விஷயங்கள் ஏராளம்: அக்ஷய் குமார்
'2.0' படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் உள்ளதாக, இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் அக்ஷய்குமார் கூறியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக துபாயில் படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் அக்ஷய்குமார் பேசும்போது, ‘இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். சங்கர் ஓரு இயக்குனராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இப்படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது'' என்றார்.
முன்னதாக துபாயில் படக்குழு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் அக்ஷய்குமார் பேசும்போது, ‘இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். சங்கர் ஓரு இயக்குனராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இப்படத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது'' என்றார்.
Next Story