என் மலர்

    சினிமா

    பிரமாண்டமாக நடைபெறும் `2.0 இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்: முழுவிவரம்
    X

    பிரமாண்டமாக நடைபெறும் `2.0' இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்: முழுவிவரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரமாண்டமாக நடைபெற இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
    லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'.

    பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    அதுமட்டுமின்றி இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இசை வெளியீட்டிற்கு முன்னதாக வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 2.0 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு `2.0' படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.



    இந்நிகழ்வைத் தொடர்ந்து `2.0' படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக, `2.0' படத்தின் இசை வெளியீடு புர்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் பிரமாண்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    * இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

    * இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0' படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்

    * பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குநர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

    * 12,000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது



    * துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட LED அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

    * துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

     உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.

    * நடிகர் கமல்ஹாசனும் `2.0' இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×