என் மலர்

    சினிமா

    `மெர்சல் விவகாரம்: நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்
    X

    `மெர்சல்' விவகாரம்: நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `மெர்சல்' பட விவகாரத்தில் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கும் படம் `மெர்சல்'.

    அட்லி இயக்கி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மத்திய அரசின் திட்டங்களை கிண்டல் செய்வதாக இருப்பதாக தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. அதேநேரத்தில் ஆதரவு குரல்களும் ஒலித்தன.

    தேசிய அளவில் சர்ச்சையாகிய இந்த பிரச்சனைக்கு தற்போது ஒரு முடிவு எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது. `மெர்சல்' படத்திற்கு எதிராக மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,



    `மெர்சல்' படத்தில் வழிபாட்டு தலங்கள் குறித்து சர்ச்சையாக பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
    Next Story
    ×