என் மலர்

    சினிமா

    `2.0 இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்
    X

    `2.0' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    துபாயில் நடைபெற இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இசை வெளியீட்டு விழாவின் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து இந்த நிகழ்ச்சி நேரலையில் காண்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்களுக்கு அது ஒரு நேரடி இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேமில்லை.

    `2.0' படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    Next Story
    ×