என் மலர்

    சினிமா

    `2.0 படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்
    X

    `2.0' படத்தில் தனது காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் `2.0' படத்தில் உருவாகி வந்த பாடல் காட்சிகளை நடித்து முடித்த ஏமி ஜாக்சன் தனத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது அந்த பாடல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    மும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்த பாடல் காட்சிகளை முடித்த ஏமி ஜாக்சன் `2.0' படத்தில் தனது காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் கடைசி இரண்டரை வருடங்களாக நடைபெற்ற `2.0' படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன, எனினும் அதன் உழைப்பு விரைவில் திரையில் அதிர வைக்கப் போகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக எடுக்கப்பட்ட அந்த பாடலில் ஏமி ஜாக்சனுக்காக வித்தியாசமான ஆடைகளை ஷங்கர் வடிவமைக்க சொல்லி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



    படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ல் துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    Next Story
    ×