என் மலர்

    சினிமா

    மெர்சல் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
    X

    மெர்சல் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்வேறு இடையூறுகளை தாண்டி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை தாண்டி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

    பல்வேறு தடங்கள்களை தாண்டி வெளியாகிய இப்படத்திற்கு சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் இடையே நல்ல விமர்சனம் கிடைத்திருக்கிறது. அதே போல் வசூலிலும் இப்படம் சாதனை படைத்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 700 தியேட்டர்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. முதல் நாள் வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 முதல் ரூ.24 கோடி வரை வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது ரஜினியின் கபாலி பட முதல் நாள் வசூல் சாதனையையும், விஜய்யின் ‘தெறி’ பட முதல் நாள் வசூல் சாதனையையும் விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வரை சுமார் ரூ.100 கோடியையும் தாண்டி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மெர்சல் படத்தை மாபெரும்  வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் விஜய் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×