சினிமா
நடிகை கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு
நடிகை கங்கனா ரணாவத் மீது நடிகர் ஆதித்ய பஞ்சோலி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்தி முன்னணி நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திரையுலகில் தான் அடியெடுத்து வைத்த காலகட்டத்தில், நடிகர் ஆதித்ய பஞ்சோலியுடன் தவறான உறவில் ஈடுபட்டிருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அதிர்ச்சி அடைந்த 52 வயது நடிகர் ஆதித்ய பஞ்சோலி, கங்கனா ரணாவத் மீது மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, என்னுடைய மனைவி, மகன் மற்றும் மகளின் பெயரையும் தேவையில்லாமல் இழுக்கிறார்கள். எனக்கு என் மீதும், என் குடும்பத்தின் மீதும் அக்கறை இருக்கிறது. ஆகையால், கங்கனா ரணாவத் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்தேன்” என்றார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இதுபற்றி அவர் கூறும்போது, “கங்கனாவும், அவரது சகோதரி ரங்கோலியும் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, என்னுடைய மனைவி, மகன் மற்றும் மகளின் பெயரையும் தேவையில்லாமல் இழுக்கிறார்கள். எனக்கு என் மீதும், என் குடும்பத்தின் மீதும் அக்கறை இருக்கிறது. ஆகையால், கங்கனா ரணாவத் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுத்தேன்” என்றார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Next Story