என் மலர்

    சினிமா

    ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0 படக்குழு
    X

    ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0' படக்குழு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0' படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
    லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.



    சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அக்‌ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
    Next Story
    ×