என் மலர்

    சினிமா

    மம்முட்டி பற்றி தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை
    X

    மம்முட்டி பற்றி தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மலையாள டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் மம்முட்டியை பற்றி தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் மலையாள நடிகை.
    மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘வெளிப்பாடின்றே புஸ்தகம்’. இந்த படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் இதில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்....’ என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. இந்த படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தவர் நடிகை அன்னாராஜன்.

    இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிமுக விழா ஒரு மலையாள டி.வி.யில் ஒளிபரப்பானது. அப்போது அவரிடம் நீங்கள் மோகன் லாலுடன் ஜோடியாக நடித்து விட்டீர்கள். நடிகர் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர்சல்மான் ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிப்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு நடிகை அன்னா ராஜன் பதில் அளிக்கும் போது துல்கர்சல்மான் கதா நாயகனாக நடித்தால் மம்முட்டி தந்தை வேடத்தில் நடிப்பாரா? அல்லது மம்முட்டி கதாநாயகனாக நடித்தால் துல்கர்சல்மான் தந்தையாக நடிப்பாரா? என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.

    இதைதொடர்ந்து நடிகை அன்னாராஜனுக்கு மம்முட்டி ரசிகர்களும், துல்கர்சல்மான் ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேஸ்-புக் உள்பட சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

    இதனால் நடிகை அன்னா ராஜன் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதைதொடர்ந்து அவர் தனது பேஸ்-புக்கில் நேரடியாக தோன்றி இதற்கு பதில் அளித்துள்ளார். அப்போது அவர் கூறும் போது நான் ஜாலியாக தெரிவித்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. ஆனாலும் மம்முட்டி, துல்கர்சல்மான் ரசிகர்களிடம் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறினார். அடிக்கடி கண்ணீரை துடைத்தபடி அவர் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
    Next Story
    ×