என் மலர்

    சினிமா

    தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்
    X

    தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கமல் நடிப்பில் வெளியான ‘தசாவதாரம்’ படத்தின் விதியை பின்பற்றி ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ படம் உருவாகியுள்ளது.
    ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’  என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தை எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

    ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கியாவோஸ் விதி. தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரஸ்யமாய் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பாலா.

    பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

    இப்படத்தின் கதையின் நாயகர்கள் தீபக், பிளாக்பாண்டி, ஜெய்சிந்த்தும், நாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடித்துள்ளார்கள். ராஜ் பரத், இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எம்.ஏ.பாலா.
    Next Story
    ×