என் மலர்

    சினிமா

    நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ரகளை: கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல்
    X

    நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ரகளை: கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் புகுந்தார். உருட்டு கட்டையால் 2 கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய அந்த வாலிபர் டிரைவரையும் தாக்கினார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் ஸ்ரீகாந்தின் படுக்கையறைக்குள் ஓடினார். அப்போது மாடிபடியில் இறங்கி வந்த ஸ்ரீகாந்தை திடீரென்று கட்டி பிடித்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த், வாலிபரை விலக்க முயன்றார். அப்போது ஸ்ரீகாந்த்தை கீழே தள்ளிவிட்டார். உடனே அந்த வாலிபர் அரைக்குள் சென்று மறைந்து கொண்டார்.

    தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் ஒருமணி நேரம் வாலிபர் அங்கும் இங்கும் ஓடினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.



    விசாரணையில், அவர் கர்னூலை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும் 3 மாதத்துக்கு முன்பு ஸ்ரீகாந்த் வீட்டில் சமையல் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    போலீசாரிடம் வெங்கடேஷ் மனநிலை பாதித்தவர் போல் பேசினார். தனக்குள் இன்னொரு மனிதன் இருக்கிறான். அவன்தான் ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் நுழையும்படி கூறினான். அவன் சொல்படிதான் நடக்கிறேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
    Next Story
    ×