என் மலர்

    சினிமா

    ஹர ஹர மகாதேவகி தமிழ் சினிமாவிற்கு புதுமையான படம் : கௌதம் கார்த்திக்
    X

    ஹர ஹர மகாதேவகி தமிழ் சினிமாவிற்கு புதுமையான படம் : கௌதம் கார்த்திக்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படம் தமிழ் சினிமாவிற்கு புதுமையான படம் என்று கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.
    கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’. சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான பாடல்களை நேற்று வெளியிட்டனர்.

    இதில் பேசிய கௌதம் கார்த்திக், ‘இந்த படத்தின் கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குனர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குனர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.

    இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது. என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை, நம்பிக்கையும் தந்தார்.

    இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதுமையான படமாக இருக்கும். நான் ஹரஹர மகாதேவகி டீமோடு மீண்டும் ஒரு படத்துக்காக இணைகிறேன். படத்தின் டைட்டிலை இயக்குனரே அறிவிப்பார். என்னுடைய ரசிகர்களை என்னை மகிழ்விக்கும் வகையில் 25கிலோ கேக்கோடு வந்து என்னுடைய பிறந்த நாளை இரண்டு நாட்களுக்கு முன்பாக இன்றே கொண்டாடினார்கள். என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் தான் என் குடும்பம்’ என்றார்.
    Next Story
    ×