என் மலர்

    சினிமா

    வேலைக்காரன் தள்ளிப்போனது ஏன்? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
    X

    வேலைக்காரன் தள்ளிப்போனது ஏன்? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' வெளியீடு தள்ளிப்போனது ஏன் என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அந்த தேதியில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி 'வேலைக்காரன்' வெளியாகாததிற்கான காரணத்தை படக்குழு முதன் முறையாக தெரிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    'வேலைக்காரன்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட உள்ளது. 'தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகவுள்ள படமென்பதால், அனைத்து தரப்பிலும் தரமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மேலும், புதிய முறையில் தணிக்கை பணிகளும் முடிவடைய 3-4 வாரங்கள் ஆகிறது.

    ஆகையால் செப்டம்பர் 29-ம் தேதி எங்களுடைய படம் வெளியாகாது. இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். பெரிய முதலீட்டு படம் என்பதால் ஏதாவது ஒரு கொண்டாட்ட காலத்தில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். அக்டோபரில் பல்வேறு படங்கள் வெளியாகவுள்ளது. நவம்பரில் எந்தொரு விழாக் கொண்டாட்டமும் இல்லை. ஆகையால் டிசம்பர் வெளியீடு மட்டுமே சரியாக இருக்கும் என தேர்வு செய்துள்ளோம். கிறிஸ்துமஸ் தின விடுமுறையே சரி என்று விநியோகஸ்தர்களும் தெரிவித்ததால், டிசம்பர் 22-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

    ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆகியோரிடமும் நீண்ட கால காத்திருப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இந்த காத்திருப்புக்கு ஒரு சிறப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

    இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×