என் மலர்

    சினிமா

    2 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் நடிகர் திலீப்
    X

    2 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் நடிகர் திலீப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை கடத்தல் வழக்கில் கடந்த 2 மாதமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் மலையாள நடிகர் திலீப் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.
    கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சிறையில் அடைக்கப்பட்டார்.

    நடிகை துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனிலின் கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு அதிரடியாக நடிகர் திலீப் (வயது 48) கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



    சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் அங்கமாலி நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், தந்தையின் நினைவுதின சடங்கில் பங்கேற்பதற்காக திலீப்புக்கு 2 மணிநேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 58 நாட்களுக்குப் பிறகு திலீப் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×