என் மலர்

    சினிமா

    மீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்
    X

    மீண்டும் ராஜேஷுடன் இணைந்த சந்தானம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சந்தானம்.
    ‘சிவா மனசுல சக்தி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். இதில் ஜீவா நாயகனாகவும், அனுயா நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தை அடுத்து ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ ஆகிய படங்களை இயக்கினார்.


    இந்த படங்களில் அனைத்திலும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் மட்டும் சந்தானம் நடிக்க வில்லை. தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தானத்துடன் இணைந்திருக்கிறார் ராஜேஷ்.

    ஆனால், இந்த முறை சந்தானத்தை கதாநாயகனாக வைத்து படம் இயக்குகிறார். இவர்கள் இணையும் புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
    Next Story
    ×