என் மலர்

    சினிமா

    விஜய்யுடன் மோத தயாரான விக்ராந்த்
    X

    விஜய்யுடன் மோத தயாரான விக்ராந்த்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்துடன் மோத தயாராகி இருக்கிறார் விக்ராந்த்.
    விக்ராந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ராந்துடன், சந்தீப் கிஷன், சூரி, மெக்ரின் பிர்ஷாடா, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள். இமான் இசையமைத்துள்ளார். ‘அறம் செய்து பழகு’ என்ற பெயரில் உருவான இப்படம், சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பெயர் மாற்றப்பட்டது.



    இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து இப்படத்தை தீபாவளி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    தீபாவளி தினத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் வெளியாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மெர்சல்’ படத்துடன், விக்ராந்த்தின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் வெளியாவது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
    Next Story
    ×