என் மலர்

    சினிமா

    ‘உண்மையான காதல் என்னுள்ளே இன்னும் இருக்கிறது’ - யாருக்கு சொல்கிறார் ஓவியா?
    X

    ‘உண்மையான காதல் என்னுள்ளே இன்னும் இருக்கிறது’ - யாருக்கு சொல்கிறார் ஓவியா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை குறித்து வெளியான பல சர்ச்சைகளுக்கு நடிகை ஓவியா வீடியோ மூலமாக விளக்கமளித்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை குறித்து வெளியான பல சர்ச்சைகளுக்கு நடிகை ஓவியா வீடியோ மூலமாக விளக்கமளித்துள்ளார்.

    பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.



    வாராவாரம் ஒவ்வொரு பிரபலமும் வெளியேறி வந்த நிலையில், நடிகை ஓவியா தினமும் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.

    அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட டெலிவிஷன் விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

    பிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு ஓவியா உள்ளானார்.



    இதனையடுத்து, காதல் தோல்வியால் பிக்பாஸ் அரங்கத்தில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியானது. தற்போது ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் உள்ளார்.

    இந்நிலையில், வீடியோ மூலமாக தன்னைப்பற்றி வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில், “ஆரவ் உடனான காதல் குறித்து அதிகமானோர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நான் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், நான் என்ன நிலைமையில் உள்ளேன்? என நிறைய பேர் கேட்டு வந்தனர்.

    நான் நலமாகவே உள்ளேன். எனக்கு எந்த மன அழுத்தமும் இல்லை. தற்போது, என்னுடைய மன அமைதிக்காக வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். ஆரவ் விவகாரம் கண்டிப்பாக... உண்மையான காதல் என்றும் தோற்காது. நீங்கள் என்னை பைத்தியம் என்று நினைக்கலாம்.. என்னடா? இந்த பொண்ணு இப்படி சொல்லுது! என நினைக்கலாம். எனக்கு என்னுடைய காதலில் நம்பிக்கை உள்ளது. என்னுள்ளே இன்னும் காதல் இருக்கிறது.

    யாரும் என்னை நம்ப வேண்டாம்.. காதலை நம்புங்கள். ஒருவரை காதலித்துவிட்டு பின்னர் அவரை வெறுக்க வேண்டும் என்றால் என்னால் அது முடியாது. என்னுடைய காதலில் நம்பிக்கை இருக்கிறது. நான் அதை கண்டிப்பாக திரும்பபெறுவேன்” என்று கூறியுள்ளார்.

    முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஓவியாவின் மன நிலையை அறிய அவரிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்வி கேட்டபோது, “ஆரவ் எனது வாழ்க்கையில் முதுகெலும்பு போன்றவராக இருக்கிறார். நான் உயிருக்கு உயிராக அவரை காதலிக்கிறேன். ஆரவ்வுக்காக நான் காத்து இருப்பேன். அவர் விரைவில் என்னிடம் வருவார்.” என்று ஓவியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×