என் மலர்

    சினிமா

    ‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கை தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவு
    X

    ‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கை தள்ளிவைத்து கோர்ட்டு உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘காலா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்துக்கு தடை கோரி, சென்னை 4-வது சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், ‘விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜசேகரனை யார் என்றே தெரியாது’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நடிகர் ரஜினிகாந்துடன் மனுதாரருக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க மனுதாரருக்கு கால அவகாசம் வேண்டும்’ என்று மனுதாரர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 3-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×