என் மலர்

    சினிமா

    போதைப் பொருள் விவகாரம்: பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சார்மியிடம் இன்று விசாரணை
    X

    போதைப் பொருள் விவகாரம்: பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சார்மியிடம் இன்று விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போதைப் பொருள் விவகாரத்தில் பூரி ஜெகன்னாத்தை தொடர்ந்து சிறப்பு விசாரணைக்குழு முன்பு நடிகை சார்மி இன்று ஆஜராகிறார்.
    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் கும்பலுடன் தெலுங்குபட முன்னணி நடிகர்கள் நவ்தீப், தருண் நடிகைகள் சார்மி, முமைத்கான் இயக்குனர் பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட 12 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பான விசாரணைக்கு அவர்கள் 12 பேரும் 19-ந்தேதி (நேற்று) முதல் 28-ந்தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராக வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    அதன் பேரில் இயக்குனர் பூரி ஜெகன்னாத் நேற்று சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பூரி ஜெகன்னாத் தனக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார். விசாரணையை முடித்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்காமல் சென்றுவிட்டார். இன்று(வியாழக்கிழமை) சிறப்பு விசாரணைக்குழு முன்பு நடிகை சார்மி விசாரணைக்கு ஆஜராகிறார்.

    21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×