என் மலர்

    சினிமா

    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை
    X

    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் - நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
    ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.

    அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.

    யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி நாளை இயக்குனர் பூரி ஜெகநாத் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.

    20-ந் தேதி நடிகை சார்மி, 21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

    இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×